/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர் போட்டியிட விண்ணப்பிக்கலாம்
/
வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர் போட்டியிட விண்ணப்பிக்கலாம்
வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர் போட்டியிட விண்ணப்பிக்கலாம்
வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர் போட்டியிட விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 04, 2011 11:21 PM
செஞ்சி : விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பா.ம.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 7ம் தேதி முதல் விருப்ப அளிக்கலாம்.
இது குறித்து மாநில துணை பொதுச்செயலா ளர் செந்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம. க.,வினரிடம் 7ம் தேதி முதல் மனுக் கள் பெறப்படுகின்றன. விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்தவர்கள் 7 மற்றும் 8ம் தேதிகளில் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும், திண்டிவனம், வானூர் தொகுதியை சேர்ந்தவர்கள் 9 மற்றும் 10ம் தேதி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் மனு அளிக்கலாம். மயிலம், செஞ்சி தொகுதியை சேர்ந்தவர்கள் 11, 12ம் தேதி செஞ்சியில் உள்ள அலுவலகத்தில் மனு அளிக்கலாம். பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2,000 ரூபாய், உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய், நகராட்சி தலைவர் பதவிக்கு 3,000 ரூபாய், உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பாதிக்கட்டணம் செலுத்த வேண்டும்.