ADDED : ஜன 17, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மாட்டு பொங்கலில் பசு மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது.
விழுப்புரம் அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்,43; விவசாயி. இவரது பசு மாட்டை நேற்று சவுக்கு தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தார்.
மாலை 6:00 மணிக்கு மாட்டு பொங்கல் விழா கொண்டாடுவதற்காக மாட்டை அழைத்துவர சென்றார்.
சவுக்கு தோப்பில் பசுமாடு இறந்து கிடந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு கீழே அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை பசு மாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

