sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை

/

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை


ADDED : ஆக 02, 2011 01:03 AM

Google News

ADDED : ஆக 02, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : நர்சிங் மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென அரசு டாக்டர் பழமலை அறிவுரை வழங்கினார்.கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

ஸ்ரீ லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் முருகப்பன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சுமதி வரவேற்றார்.இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் உதவி டாக்டர் பழமலை பேசியதாவது:மருத்துவ பணி என்பது மனித உயிர்களை காக்கும் மகத்தானது. பிறருக்கு சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மாணவர் பருவத்திலேயே பல்வேறு சேவைகளை செய்து மாண்புடன் வாழகற்றுக் கொள்ளுங்கள். ஏராளமானவர்களின் உயிர்காக்க ரத்த தானம் செய்து பிறருக்கு உதவுங்கள். படித்து முடித்து பணி செய்யும் காலத்தில் ஏழை மக்களின் சுகாதாரமான வாழ்வுக்கு உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். நர்சிங் மாணவர்கள் மனித உயிர்களை காக்கும் மகத்தான சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு டாக்டர் பழமலை பேசினார்.ஸ்ரீ லஷ்மி கலை அறிவியல் ல்லூரி முதல்வர் முத்தழகி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், துணை முதல்வர் சந்துரு, ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், சேஷாத்திரி, விக்டர் கிருபைராஜன் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் அசோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us