sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்

/

தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்

தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்

தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்


ADDED : செப் 26, 2011 10:35 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.

தியாகதுருகம் ஒன்றியத்தில் 40 ஊராட்சி தலைவர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 297 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.நேற்று மதியம் அமாவாசை துவங்கியதால் பல ரும் மனு அளிக்க தங்கள் ஆதரவாளர்களுடன் வாகனங்களில் பி.டி.ஓ., அலுவலகம் வந்திருந்தனர்.



நேற்று மட்டும் ஊராட்சி தலைவர் பதவிக்கு 41 பேரும், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 10 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 பேரும் மொத்தம் 146 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 256 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முத்துமீனாள், ராசாத்தி, மோகன் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை. அதேபோல்பேரூராட்சி தலைவர் பதவி, கவுன்சிலர் பதவிக்கு தலா ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று அமாவாசை என்பதால் பெரும்பாலானோர் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us