ADDED : செப் 26, 2011 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.
விழாவையொட்டி இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நவராத்திரி மகோற்சவ விழா நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பத்ராசலம், தக்கார் சிவாகரன், அர்ச்சகர் வாசு பட்டாச் சாரியார் செய்து வருகின்றனர்.