/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 11, 2011 10:58 PM
செஞ்சி : செஞ்சி தாலுகா கோணை மதுரா வடகால் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு 10ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, திரவிய ஹோமம், மகா சத்தி ஹோமம் செய்தனர். காலை 8 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 8.10 க்கு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை யும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இரவு மகா தீபாராதனை, வாணவேடிக்கை, சாமி வீதியுலாவும் நடந்தது.