/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெந்நீர் கொட்டியதில் பெண் குழந்தை பலி
/
வெந்நீர் கொட்டியதில் பெண் குழந்தை பலி
ADDED : ஆக 11, 2011 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்:வெந்நீர் கொட்டியதில் காயமடைந்த குழந்தை இறந்தது.விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் காந்தி நகரை சேர்ந்தவர் அருள்,30.
இவரது ஒன்றரை வயது மகள் சாதனா, கடந்த 7ம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் வைத்திருந்த பாத்திரம் சாய்ந்து குழந்தை சாதனா மீது கொதி நீர் பட்டது. பலத்த காயமடைந்த குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சாதனா இறந்தார்.இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.