/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இஞ்சிமேடு கோவிலில் மூல நட்சத்திர ஹோமம்
/
இஞ்சிமேடு கோவிலில் மூல நட்சத்திர ஹோமம்
ADDED : ஆக 11, 2011 11:14 PM
செஞ்சி : இஞ்சிமேடு கல்யாணவரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சி மேட்டில் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள கல்யாணவரத அனு மனுக்கு நேற்று முன்தினம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், ராமர், சீதை, லட்சுமணர், லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 10 மணிக்கு இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்ட சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் உலக அமைதிக்காக தன்வந்திரி, சுதர்சன, ஆஞ்சநேய, நரசிம்ம, கருட பூஜையும், ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு கல்யாண வரத அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். ராமர், லட்சுமணர், சீதை ஆகியோருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். பிற்பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்தனர்.