sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு

/

மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு

மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு

மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு


ADDED : செப் 06, 2011 10:42 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்ப மரத்தை இரவோடு இரவாக வெட்டி எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சி தாலுகா கூடுவாம்பூண்டி ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் 100 வயதுடைய பெரிய வேப்ப மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தை கடந்த 4ம் தேதி இரவு இப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு இரவாக பொக்லைன் வைத்து வெட்டி எடுத்து சென்றுள்ளனர். ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரத்தை இரவில் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து வி.ஏ.ஓ., விடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். செஞ்சி பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படும் போது ஒப்புக்கு அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தை போல் 10 மடங்கு மதிப்புடைய மரங்களை திருடி விற்பனை செய்பவர்களுக்கு அபராதத்தினால் எந்த நஷ் டமும் ஏற்படுவதில்லை. எனவே மரத்தை திருடியதற்காக அபராதம் விதிப் பதை அதிகாரிகள் தவிர்த்து விட்டு, திருடி சென்ற மரங் களை பறிமுதல் செய்வதுடன், அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூடுவாம்பூண்டி கிராம மக்கள் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.








      Dinamalar
      Follow us