ADDED : செப் 21, 2011 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் ஆர்.கே., சோழன் ஆர்ட் அகாடமி சார்பில் துவக்க
பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த
சி.மெய்யூர் துவக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நிர்வாகி சர்வோத்தமன்
தலைமை தாங்கினார்.
ஆசிரியை உமா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 1ம்
வகுப்பு முதல் 5ம் வகுப்பு பிரிவு மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆர்.கே., சோழன் ஆர்ட் அகாடமி
நிறுவனர் ரீட்டா குலோத்துங்கன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியை பூவழகி நன்றி கூறினார்.