ADDED : ஜூலை 31, 2011 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செங்கான் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நான்கு முனை சந்திப்பில் நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் கூத்தக்குடி அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்த சஞ்சய், சுப்ரமணி என்பதும், கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி இரவு எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன் அரிசி கடையின் பூட்டை உடைத்து 3,500 ரூபாய் திருடியது தெரிந்தது. இரு வாலிபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.