ADDED : செப் 20, 2011 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.
சங்கராபுரம் வட்டார வள மையத்தில் சங்கராபுரம் ஒன்றியத்திலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மாவட்ட கல்வி தகவல் படிவம் பூர்த்தி செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் பானுமதி பயிற்சி வகுப்பை துவங்கி வைத்தார். கியான்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.