ADDED : ஆக 30, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் கடந்த, 18 ம் தேதி, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்பு, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
இவர்களின் போராட்டம் நேற்று 13வது நாளாக நீடித்தது. சி.ஐ.டி.யு., மண்டல பொது செயலாளர் வேலு தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சி.ஐ.டியூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் ரகோத்தமன் பேசினர்.
இதில், தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும்; கடந்த 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்; என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.