/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மோதி காயமடைந்த வாட்ச்மேன் சாவு
/
பைக் மோதி காயமடைந்த வாட்ச்மேன் சாவு
ADDED : மே 02, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்:மயிலம் பகுதியில் பைக் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார்.
மயிலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம், 60; தனியார் கல்லுாரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 25ம் தேதி இரவு 9:15 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
மயிலம் அருகே பின்னால் வந்த பிளண்டர் பைக், பரமசிவம் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பரமசிவம் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.