ADDED : டிச 04, 2024 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: இருவேல்பட்டு கிராமம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஆற்றோரம் அமைந்துள்ள மருத்துவனைக்குள் வெள்ளம் புகுந்தது.
இதில் மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள், பதிவேடுகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், படுக்கை அறைகள், ஸ்கேனர் அனைத்தும் முற்றிலும் தண்ணீரில் அடித்து சென்றது. மருத்துவர்கள் மருத்துவமனை உள்ளே செல்ல முடியாததால் பணிகள் பாதித்தது.