/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடக்கு மாவட்ட தி.மு.க., துணை முதல்வருக்கு வரவேற்பு
/
வடக்கு மாவட்ட தி.மு.க., துணை முதல்வருக்கு வரவேற்பு
வடக்கு மாவட்ட தி.மு.க., துணை முதல்வருக்கு வரவேற்பு
வடக்கு மாவட்ட தி.மு.க., துணை முதல்வருக்கு வரவேற்பு
ADDED : நவ 06, 2024 10:43 PM
விழுப்புரம் ; விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர், துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், நேற்று காலை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக துணை முதல்வருக்கு, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர்,தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் ரமேஷ், நகராட்சி சேர்மன் ஜெயமூர்த்தி, பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், உஷா முரளி, யோகேஸ்வரி மணிமாறன், தயாளன், துணை சேர்மன்கள் ஜீனத்பீவி முபாரக், பருவ கீர்த்தனா வினாயகமூர்த்தி, புனிதா ராமஜெயம், பழனி, ராஜாராம், ராஜலட்சுமி செயல்மணி, ஜெயபாலன், மலர்விழி அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் எழிலரசி ஏழுமலை, மனோசித்ரா ராஜேஷ்வரன், புஷ்பவள்ளி குப்புராஜ், அன்புமணி, கவுதம், மகேஸ்வரி குமரேசன், விஜயன், அன்புசெழியன், சசிகலா மோகனசுந்தரம், செல்வி ராமசரவணன், சாந்தி சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.