/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்களவாய் கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
தென்களவாய் கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஏப் 22, 2025 04:50 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தென்களவாய் கிராமத்தில், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மஸ்தான் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
பேச்சாளர் சேலம் சுஜாதா சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட பொருளார் ரமணன், ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, அய்யப்பன், பழனி, கல்யாணராமன், அரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சாயத்து துணை தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.