/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
/
அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
ADDED : ஜூலை 26, 2025 08:04 AM

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அடிப்படை வசதிகளையும், உள் கட்டமைப்பையும் விரிவுபடுத்தாமல் இருப்பதால், பக்தர்கள் கடும்பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான ஆன்மிக தலமான மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் கடந்த 30 ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ளது.
இங்கு நடக்கும் பாரம்பரிய தேர்திருவிழாவான மாசி பெருவிழாவிற்கும், ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபட பக்தர்கள் அதிகம் வந்தனர். இந்த நிலை மாறி தற்போது ஒவ்வொரு அமாவாசைக்கும் 1 முதல் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிகின்றனர்.
சாதாரண நாட்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம்; ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம்; என பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் வருகையுடன் ஒப்பிடும் போது கோவில் வளாகத்திலும், ஊரிலும் இதுவரை செய்துள்ள அடிப்படை வசதிகள் 20 சதவீதத்தை கூட எட்ட வில்லை.
அமாவாசை உற்சவம் இந்த கோவிலில் சித்திரை, மாசி மாதம் தவிர மற்ற மாதங்களில் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் இரவு 11:00 மணிக்கு துவங்கி 12:00 மணிக்கு முடிந்து விடும்.
இதன் பிறகு ஒரு பகுதி பக்தர்கள் வெளியேறினாலும், ஒரு பகுதியினர் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் தங்கி இருந்து காலையில் செல்கின்றனர். மாசி, சித்திரை மாதத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்குகின்றனர்.
அடிப்படை வசதி இந்த கோவிலுக்கு வருபவர்கள் மற்ற கோவிலை போல் சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விடுவதில்லை. பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுபவர்களும், திருமண தடை, தம்பதிகளுக்குள் பிரச்னை, கடன் பிரச்னை, தீராத நோய் உள்ளவர்களும் இங்கே இரவு தங்கி இருந்து மறுநாள் செல்கின்றனர்.
அத்துடன் லட்சக்கணக்காண குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் மற்ற கோவில்களை விட அதிகம் தேவைப்படுகிறது.
குவியும் பக்தர்கள் ஆனால் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற கோவில்களுக்கு ஒதுக்கும் நிதியை விட மிக குறைந்த அளவிலேயே இந்த கோவிலுக்கு ஒதுக்குகிறது.
இது ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்திருந்தனர்.
கழிவறை இல்லை இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் கழிப்பறை வசதிகளை செய்ய வில்லை.
பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கட்டும் பணி நடப்பதால் அங்கும் கழிவறை இல்லை. இரவு முழுவதும் பெண்கள் கழிப்பிட வசதிகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இன்றி கடைகளில் தண்ணீர் பாட்டில் வங்கி பயன்படுத்தினர். அகலம் குறைவான சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் நின்றதால் வளத்தி, அவலுார்பேட்டை மார்க்கம் இருந்து வந்த பக்தர்கள் 3 முதல் 4 கி.மீ., துாரத்திற்கு மின் விளக்கு வசதி இல்லாத சாலைகளில் நடந்து வந்தனர்.
சாலைகளில் தஞ்சம் பக்தர்கள் தங்குவதற்காக கட்டியுள்ள கூடங்களில் பிச்சைக்காரர்களும், சமூக விரோதிகளுமே தங்கி உள்ளனர்.
அதுவும், 500க்கும் குறைவான பக்தர்களே இதில் தங்க முடியும். நேற்று முன்தினம் இங்கு வந்திருந்த
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி மேல்மலையனுாரில் உள்ள குறுக்கு சாலைகளில் மண் தரையில் குழுந்தைகளுடன் துாங்கினர். நல்ல வேலையாக மழை இல்லாமல் இருந்ததால் பக்தர்கள் அதில் இருந்து தப்பினர்.
யாத்ரீகர் நிவாஸ் தேவை இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் கோவில்களில் மேல்லையனுாரும் ஒன்று. பல கோடி வருவாயை அம்மனுக்கு காணிக்கையாக தரும் பக்தர்களுக்கு சில கோடிகளில் தங்கும் விடுதி கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால், பக்தர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.
எனவே இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று மேல்மலையனுாரில் பெரிய அளவிளான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும், அத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பெரிய கோவில்களில் உள்ளதை போல், கழிவறை, குளியல் அறை, கிளாக் ரூம் வசதியுடன் கூடிய யாத்ரீகர் நிவாஸ் அமைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.