ADDED : ஏப் 02, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் மனைவி பிரியா, 33; இவர் குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு கடந்த மாதம் 30ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.