ADDED : அக் 23, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : காணை அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காணை அருகே வெண்மணியாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கலிய பெருமாள், 70. இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தின் வரப்பு வழியாக யாராவது சென்றால் அவர்களை திட்டுவது வழக்கம்.
கடந்த 16ம் தேதி வரப்பு வழியாக சென்றவரை கலியபெருமாள் திட்டிய போது, அவரது மனைவி அம்பாலிகை, 60; கண்டித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த கலியபெருமாள் பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.