sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை: திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு

/

கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை: திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு

கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை: திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு

கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை: திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு


ADDED : நவ 11, 2025 06:44 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், மனைவி, அவரது கள்ளக்காதலன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சத்யராஜ், 34; இவர், சென்னையில் தங்கி, தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா முத்துச்செல்வம், 27. இவருக்கும், அதே பகுதி ஜானகிராமன், 25; என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், சத்தியராஜை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர்.

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி, சசிகலா முத்துசெல்வம் தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறி, கணவரை நாட்டார்மங்கலத்திற்கு வரவழைத்தார்.

இருவரும் மொடையூர் வழியாக பைக்கில் சென்றபோது, அங்குள்ள ஆற்று பாலத்தின் கீழே பைக்கை நிறுத்தும்படி கூறிய சசிகலா முத்துசெல்வம், அங்கு பதுங்கியிருந்த கள்ளக்காதலன் ஜானகிராமனுடன் சேர்ந்து சத்யராஜின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியோடினர்.

பலத்த காயமடைந்த சத்யராஜ் சத்தம் போட்டதால், அந்த வழியாக வந்தவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்ததால், அவர் உயிர் பிழைத்தார்.

இது குறித்து, செஞ்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, சசிகலா முத்துசெல்வம், ஜானகிராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் ஆதித்தன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், குற்றவாளியான இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, இருவரும் கடலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us