ADDED : ஜூலை 18, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வானுார் அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அருகே ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செல்வம்,42; இவர், சரியாக பணிக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் செல்வம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி தமிழேந்தி திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வம், அங்கு நிலத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த சிலர் அவரை, மீட்டு வானுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.