sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதிய கட்டடங்களுக்கு நகராட்சி நிறைவு சான்று... கிடைக்குமா?: விழுப்புரம் நகர கட்டட உரிமையாளர்கள் தவிப்பு

/

புதிய கட்டடங்களுக்கு நகராட்சி நிறைவு சான்று... கிடைக்குமா?: விழுப்புரம் நகர கட்டட உரிமையாளர்கள் தவிப்பு

புதிய கட்டடங்களுக்கு நகராட்சி நிறைவு சான்று... கிடைக்குமா?: விழுப்புரம் நகர கட்டட உரிமையாளர்கள் தவிப்பு

புதிய கட்டடங்களுக்கு நகராட்சி நிறைவு சான்று... கிடைக்குமா?: விழுப்புரம் நகர கட்டட உரிமையாளர்கள் தவிப்பு


ADDED : செப் 02, 2025 03:46 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் கட்டி முடிக்கப்பட்ட பல புதிய கட்டடங்களுக்கு, நகராட்சி நிறைவு சான்று மறுக்கப்படுகிறது. இதனால், நிரந்தர மின் இணைப்பு பெற முடியாமல் கட்டட உரிமையாளர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு அளித்தனர். கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவினர், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அதன்படி தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி, கடலுார், சிதம்பரம், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதிகளின் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.

அப்போது, விழுப்புரம் மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், தமிழக அரசு அமல்படுத்திய மின் கட்டண உயர்வால், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண அளவீடு பணியை, மாதந்தோறும் என மாற்றிட வேண்டும்.

சொத்துவரி உயர்வால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில், விழுப்புரம் உட்பட ஒரு சி ல நகரங்களில் மட்டும், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களுக்கு, நகராட்சி சார்பில் நிறைவு சான்று மறுக்கப்படுகிறது. சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று தாமதமின்றி வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரச்னையால், நிரந்தர மின் இணைப்பு பெற முடியாமல் கட்டட உரிமையாளர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், கோரிக்கைகள் தீரவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். மேலும், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு உள்ளிட்ட கொள்கை முடிவுகள் தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை.

விழுப்புரம் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு, நகராட்சி பணி நிறைவு சான்று வழங்குவது போன்ற உள்ளூர் பிரச்னைகளையாவது தீர்த்து வைப்பதற்கு, ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us