sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தடகளத்தில் அசத்தி வரும் மாணவர் கல்வித்துறை கைகொடுக்குமா?

/

தடகளத்தில் அசத்தி வரும் மாணவர் கல்வித்துறை கைகொடுக்குமா?

தடகளத்தில் அசத்தி வரும் மாணவர் கல்வித்துறை கைகொடுக்குமா?

தடகளத்தில் அசத்தி வரும் மாணவர் கல்வித்துறை கைகொடுக்குமா?


ADDED : ஜூலை 24, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்-சர்மிளா தம்பதியின் மகன் புவனேஸ்வரன், 16; செஞ்சி கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், வட்ட அளவிலும், மாவட்ட, மாநில அளவிலும் நடந்த தடகள போட்டியில் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட பதக்க ங்களை பெற்றுளார்.

இது குறித்து மாணவர் புவனேஸ்வரன் கூறியதாவது:

கடந்த 2022ம் ஆண்டு செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு படித்த போது ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்தேன்.

அதே ஆண்டில் விழுப்புரத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3ம் இடம் பிடித்தேன்.

கடந்த, 2023ம் ஆண்டு ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் நடந்த குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 100, 200 மீட்டர் ஓட்ட பந்தயம், தொடர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதலில் முதல் இடம் பிடித்தேன்.

அதே ஆண்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் ஓட்ட பந்தயத்தில் 100, 200 மீட்டரில் முதல் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றேன்.

கடந்த, 2024ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநில அளவிளான போட்டியில் கலந்து கொண்டு ஓட்ட பந்தயத்தில் 100 மீட்டரில் 4வது இடமும், 200 மீட்டரில் 7 வது இடமும் பிடித்தேன். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்காக பதக்கம், சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

மாநில அளவில் நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதால், மயிலாடுதுறையில் மத்திய அரசின் இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தி வரும் தேசிய அளவிலான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன்.

அங்கு சில மாதம் தங்கி பயிற்சி பெற்றேன். குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் செஞ்சிக்கு வந்து விட்டேன்.

செஞ்சியில் நீண்ட தூரம் ஓடி பயிற்சி பெற ஓட்டப்பந்தய மைதானம் இல்லாததால் முழு அளவில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினரர்.

புவனேஸ்வரன் தந்தை கருணாகரன் கார் டிரைவராக உள்ளார். பாட்டி நடத்தி வரும் சிறிய சிற்றுண்டி கடையில் புவனேஸ்வரன் காலை, மாலையில் அவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

குடும்பத்தில் வசதி இல்லாததால் பயிற்சிக்கான உபகரணங்களை இவரால் வாங்க முடியவில்லை.

உற்சாகமும், ஆர்வமும் உள்ள மாணவர் புவனேஸ்வரனுக்கு மாவட்ட கல்வித்துறை கை கொடுத்து ஊக்கப்படுத்தினால் மாநில அளவில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் தடகள போட்டிகளில் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us