ADDED : டிச 11, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று மாலை இந்திராகாந்தி பஸ் நிலையப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பெண்ணை சோதனை செய்ததில், அவர் 50 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு, மலைக்கோவில் தெருவை சேர்ந்த நரிக்குறவ பெண் மனோகரி, 37; என தெரிந்தது.
உடன் அவரை திண்டிவனம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.