ADDED : மார் 22, 2025 03:39 AM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கஜா எனும் கஜேந்திரன், 45; தனியார் பஸ் டிரைவர். இவரது 2வது மனைவி அமுதா, 32; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. முதல் மனைவி இறந்த நிலையில் அவர் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கஜேந்திரன் தாயும், தந்தையும் அமுதாவிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த அமுதா, நாராயணபுரத்தில் உள்ள வீட்டில் கடந்த 19ம் தேதி இரவு துாக்கு போட்டுக் கொண்டார். உடன், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.