/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துப்பட்டா பைக்கில் சிக்கி காயமடைந்த பெண் பலி
/
துப்பட்டா பைக்கில் சிக்கி காயமடைந்த பெண் பலி
ADDED : ஜன 21, 2025 06:49 AM
செஞ்சி: பைக்கில் துப்பட்டா சிக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர் மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் மகன் ஜம்சித்,36; இவர், கடந்த 19ம் தேதி திண்டிவனத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது மனைவி தாஹீராபானு,33; வுடன் பைக்கில் ஊருக்கு புறப்பட்டார்.
செஞ்சி சாலையில் காந்தி நகர் அருகே வந்த போது தாஹீரா பானுவின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்ததில் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

