ADDED : செப் 19, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: வானுார் மெயின் ரோட்டில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வானுார் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி கண்ணகி, 52; மெயின் ரோட்டில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ், மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி மோகன் ஆகியோர் கடையில் ஆய்வு செய்து, 66 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்து கண்ணகி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.