/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டி அடித்து கொலை போலீசில் பெண் சரண்
/
மூதாட்டி அடித்து கொலை போலீசில் பெண் சரண்
ADDED : பிப் 14, 2025 05:05 AM

அவலுார்பேட்டை: வளத்தி அருகே கொடுத்த பணத்தை கேட்ட மூதாட்டியை அடித்து கொலை செய்த பெண் போலீசில் சரணடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி லட்சுமிகாந்தி, 67; அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி வளர்மதி, 45. இருவரும் கணவரை இழந்தவர்கள்.
வளர்மதி மேல்மலையனுார் அடுத்த ஆர்க்காம்பூண்டியில் சத்துணவு பொறுப்பாளராக உள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் 1.50 லட்சம் ரூபாயை லட்சுமிகாந்தியிடம் கடனாக வட்டிக்கு வாங்கியுள்ளார்.
பணத்தை திருப்பித் தராததால், நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் வளர்மதி வீட்டிற்கு சென்ற லட்சுமிகாந்தி, தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த வளர்மதி கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த லட்சுமிகாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி, லட்சுமிகாந்தியின் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்து, நள்ளிரவில் எடுத்துச் சென்று அருகில் உள்ள நிலத்தில் போட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் சிக்கிவிடுவோம் என பயந்த வளர்மதி, நேற்று அதிகாலை வளத்தி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிந்து வளர்மதியை கைது செய்தனர்.
மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

