/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செயல்வழிக் குழுவில் பெண்கள் விழா
/
செயல்வழிக் குழுவில் பெண்கள் விழா
ADDED : ஜன 22, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்- ஆரோவில் கிராம செயல்வழிக் குழு சார்பில் பெண்கள் விழா நடந்தது.
விழாவில், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, வட்டார சுகாதார அலுவலர் ஜெயப்பிரகாஷ், இரும்பை ஊராட்சி தலைவர் வசந்தி ஆகியோர், கடந்த மாதம் திருவண்ணாமலையில் மாநில அளவில் நடந்த, மூத்தபெண்களுக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்று 25 தங்க பதக்கங்களை வென்றவர்களைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
ஆரோவில் நிர்வாகிகள் ஆலன் பொனாரிடு, அபா, பிரிட்ஜிட் மற்றும் ஆரோவில் செயல்வழிக்குழு இயக்குனர்கள் ஜெரால்டு மோரிஸ், அன்பு, ஆரோவில் ஐ.டி.ஐ., முதல்வர் லாவ்காட் உட்பட பலர் பங்கேற்றனர்.