ADDED : ஜூலை 12, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார் .
விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரை சேர்ந்தவர் ராஜாங்கம், 48: கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து, தாய் பிச்சையம்மாளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று பகல் 11:45 மணிக்கு, விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். அங்கு பிரசாதம் வாங்கியவர், உடனடியாக மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து முதலுதவி செய்ய பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிந்தது.
விக்கிரவாண்டி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.