/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
/
மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
ADDED : ஆக 18, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனத்தில் மரம் வெட்டும் போது கீழே விழுந்து தொழிலாளி இறந்தார்.
திண்டிவனம், பாரதி தாசன் பேட்டையைச் சேர்ந்தவர் அய்யப்பன், 42; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளையை வெட்டும்போது தவறி கீழே விழுந்தார்.
தலையில் படுகாய மடைந்த அவர், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.