ADDED : மார் 11, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த மல்லிகைபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐசரிவேலன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணியளவில் ஒரத்துாரில் உள்ள தார் பிளாண்ட்டில் சிறு மின் மோட்டாரை இயக்கி தண்ணீரால் பைக்கை கழுவினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

