ADDED : ஜூலை 10, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம : திண்டிவனம் அருகே சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி லாரி மோதி இறந்தார்.
நடுவனந்தல் கிராமத்தில் வசித்தவர் ஏழுமலை, 55; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, திண்டிவனம்-தீவனுார்சாலை, நடுவனந்தல் கூட்டு சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.
அப்போது செஞ்சியிலிருந்து உத்திரமேரூருக்கு இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
விபத்து தொடர்பாக வெள்ளிமேடுப்பேட்டை போலீசார், கல்லாலிப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தன், 50; மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.