ADDED : மார் 07, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கூலி உயர்வு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., சுமைப்பணி சங்கம் மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார்.
பன்னீர்செல்வம், சங்கிலித்தேவன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, சுமைப்பணி சம்மேளனம் மாநில பொருளாளர் குமார், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். சென்னை தொழிலாளர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, உடனே கூலி உயர்வு வழங்கிழய தீர்ப்பை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

