/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் சாதனை
/
பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் சாதனை
பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் சாதனை
பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் சாதனை
ADDED : ஆக 20, 2025 11:00 PM

விக்கிரவாண்டி,; மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் வெண்கல பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகம், மதுரை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் இணைந்து மதுரையில், மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.
இந்த போட்டியில் விக்கிர வாண்டி அடுத்த முட்டத்துார் ஒய்காப் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் சப்-ஜீனியர் பிரிவில் விளையாடி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.
இதில் விளையாடிய ராஜஸ்ரீ என்ற மாணவி தேசிய அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டிற்கு தேர்வு பெற்றார்.
பரிசுகள் வென்ற மாணவிகளை வேலுார் சி.எஸ். ஐ., பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்.