sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்

/

எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்

எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்

எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 15, 2025 11:35 PM

Google News

ADDED : மே 15, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக பதிவு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட இளையோர் அலுவலர் சஞ்சனா வாட்ஸ் செய்திக்குறிப்பு;

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் 18 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களை எனது பாரதம் குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இயற்கை பேரழிவுகள், விபத்துகள், பொது அவசர நிலைகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகளில் மத்திய, மாநில அரசு நிர்வாகத்திற்கு உதவும் வகையில் தன்னார்வப்படையை உருவாக்குவதை இம்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.

மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை, போக்குவரத்து மேலாண்மை, கூட்டக் கட்டுப்பாடு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் உதவுதல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்து ஆர்வமுள்ள இளைஞர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்யலாம்.

தற்போதுள்ள எனது பாரதம் தன்னார்வலர்கள், தேசத்திற்கு சேவை செய்ய விரும்பும் புதிய நபர்கள் சேரலாம். இளைஞர்கள் https://mybharat.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலரை நேரிலோ அல்லது 04146 -220699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us