ADDED : ஜூலை 12, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வல்லரசு, 25; கூலி தொழிலாளி. இவர், 19 வயது இளம் பெண் ஒருவரை, கடந்த ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானார்.
அவரை வல்லரசு திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இது குறித்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.