ADDED : ஜூன் 26, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் காலை விராட்டிக்குப்பம் பாதையில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு விற் பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த விழுப்புரம், வள்ளலார் நகர் பழனி வேல் மகன் கார்த்தி, 22; என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

