/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
/
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
ADDED : ஜூலை 20, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் மயிலம் அருகே உள்ள செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த பஸ்சில் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த அருணாச்சலம், 28; என்பவர் 12 மதுபாட்டில்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.