ADDED : செப் 17, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த தஷ்ணாமூர்த்தி மகன் காசிநாதன், 24; என்பவரிடம் சோதனை செய்தபோது, அவர் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் கடத்தி சென்றது தெரிந்தது.
இது குறித்து, அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர் மீது, விழுப்புரத்தில் ஏற்கனவே அடிதடி, மோதல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.