ADDED : ஏப் 21, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் கரடிப்பாக்கம் தென்பெண்ணையாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய், 21; என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏஸ் வேனை பறிமுதல் செய்தனர்.

