ADDED : அக் 01, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய வாலிபரை கைது செய்து மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் காரப்பட்டு மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் மினி வேனில் மணல் கடத்திய ஆனத்துார் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் குமார், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தி வைத்திருந்த, மினி வேனை பறிமுதல் செய்தனர்.