ADDED : அக் 13, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் வரத ராஜன், 22; ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்.
இவர், கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின்பேரில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.