ADDED : ஜூலை 30, 2025 11:19 PM

விழுப்புரம்: விழுப்புரம் - விருத்தாசலம் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயிலில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பாசஞ்சர் ரயில் சென்றது. இந்த ரயில் கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எஞ்சினில் சிக்கி துாக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து இறந்த வாலிபரின் விபரம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரை பற்றி தகவல் தெரிந்தால் விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில், மொபைல் எண்ணிற்கு, 94981 52678 தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.