ADDED : ஜூலை 02, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் கண்ணியப்பன், 28; விழுப்புரத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வாட்டர் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வாட்டர் சர்வீஸ் செய்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
அவரது மனைவி கங்கா, 22; கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.