/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விபத்தில் வாலிபர் பலி; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்
/
சாலை விபத்தில் வாலிபர் பலி; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்
சாலை விபத்தில் வாலிபர் பலி; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்
சாலை விபத்தில் வாலிபர் பலி; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்
ADDED : ஜன 17, 2025 11:07 PM
திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் பாஸ்கர்,30; இவர், வெள்ளிமேடுபேட்டை நோக்கி, மோட்டார் சைக்கிளில், தனது நண்பர் தனசேகர் மகன் பாலமுருகன்,33; என்பவருடன் சென்றார்.
அப்போது வெள்ளிமேடுபேட்டையில் இருந்து, திண்டிவனம் நோக்கி, செய்யார் தாலுகா, வெங்கடேசன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகன் ஹரிகிருஷ்ணன்,28; அவரது தாய் சரஸ்வதி,55; ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் பாஸ்கர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பாலமுருகன், அரிகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின், மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.