ADDED : செப் 22, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி வாலிபர் இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் ஆகாஷ்ராம், 25; விவசாயி. இவர், நேற்று மாலை 6:45 மணிக்கு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள 2வது பிளாட்பாரத்தை கடந்தார்.
அப்போது, குருவாயூர் - சென்னை நோக்கி செல்லும் அதிவிரைவு ரயிலில், ஆகாஷ்ராம் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.