sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விஷம் குடித்து இறந்த வாலிபர்: வி.சி., கட்சியினர் போராட்டம்

/

விஷம் குடித்து இறந்த வாலிபர்: வி.சி., கட்சியினர் போராட்டம்

விஷம் குடித்து இறந்த வாலிபர்: வி.சி., கட்சியினர் போராட்டம்

விஷம் குடித்து இறந்த வாலிபர்: வி.சி., கட்சியினர் போராட்டம்


ADDED : ஜூன் 07, 2024 06:37 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து வி.சி., கட்சியினர் மருத்துவமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் அடுத்த வீடூர் புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார், 25; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வீட்டு கடன் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 1ம் தேதி, அருண்குமார் வசூலித்த வீட்டு கடன் தொகையை செலுத்தாததால், அந்த பணத்தை செலுத்தும்படி நிதி நிறுவனத்தின் மேலாளர், நெருக்கடி கொடுத்துள்ளார்.இதனால் மனமுடைந்த அருண்குமார், அன்று மாலை பேரணி - பெரியதச்சூர் சாலையில் உள்ள மரவாடி அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.அவரது மனைவி மல்லிகா, 19; தனது கணவர் அருண்குமாரிடம், நிதி நிறுவன மேலாளர், நெருக்கடி கொடுத்ததால், அவர் விஷம் குடித்து இறந்ததாக புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனை முன் வி.சி., மாவட்ட செயலாளர் தீலிபன் தலைமையில் உறவினர்கள் இறந்த அருண்குமாருக்கு உடனடியாக நிதி நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்கக் கோரி காலை 9:00 மணியளவில் மருத்துவமனை வாயில் முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிதி நிறுவனத்தின் சார்பில் காப்பீட்டு தொகை பெற்றுத்தருவதாக மண்டல மேலாளர் உறுதியளித்ததன் பேரில் மாலை 3:00 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர்.அதனைத் தொடர்ந்து, அருண்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us