sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை

/

கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை

கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை

கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 11, 2011 10:52 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் இருபுறமும் உள்ள கால்வாய்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டடுள்ளதால் மழை நீர் செல்ல முடியாமல் உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையிலிருந்து பாலையம்பட்டிக்கு செல்லும் வழியில் அரசு அலுவலகங்கள், போலீசார் குடியிருப்பு, புறநகர் குடியிருப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் மதுரை ரோடு 80 அடியாக இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 30 அடி ரோடாக சுருங்கியுள்ளன. ரோட்டின் இருபுறமும் உள்ள கால்வாய்களில் மழைநீர் சென்று செவல் கண்மாய் மற்றும் பெரிய கண்மாய்க்கு செல்லும். கால்வாயை சுற்றி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து முழுமையாக கால்வாய்கள் அடைக்கப்பட்டு விட்டன.



மழை காலங்களில் ஓடைகள் வழியாக மழைநீர் செல்ல முடிவதில்லை. மேலும், கால்வாய்கள் அடைபட்டுள்ளதால், புறநகர் பகுதி வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அங்கு கொட்டப்படுகின்றன. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளது. கழிவுகளை உண்ண வரும் பன்றிகள், நாய்கள் அங்கும் இங்கும் ஓடி வாகனங்களில் மீது மோதி விபத்தை உண்டாக்குகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: மதுரை ரோடு ஓடை பகுதியில் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க உள்ளோம். கூடிய விரைவில் அகற்றப்படும், என்றார்.










      Dinamalar
      Follow us